29th September 2020 00:10:43 Hours
இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் வருடாந்த பிரித் நிகழ்வானது பனாகொடயிலுள்ள படைத் தலைமையகத்தில் 25 ஆம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மத மரபுகளுக்கு ஏற்ப, படைத் தளபதி இரவு முழுவதும் ‘பிரித்’ நிகழவை நடத்துமாறு தலைமை தேரருக்கு அழைப்பு விடுத்தார். மறுநாள் காலையில் இலங்கை இராணுவ பொது சேவை படையின் அனைத்து சேவை மற்றும் ஓய்வு பெற்ற படையினர் , உயிர் நீத்த போர் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோருக்காக ஆசிர்வாதம் பெறுவதற்காக 25 பௌத்த பிக்குகளுக்கு ‘ஹீல் தான’ வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஹந்துன்முல்ல, மன்ற உறுப்பினர்கள், எஸ்.எல்.ஏ.ஜி.எஸ்.சி சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் பங்கேற்றனர். Running Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp