17th September 2020 13:20:23 Hours
பிரிகேடியர் அஜித் பல்லேவல அவர்கள் 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 13 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (15) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒட்டுசுட்டான் தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இப் படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதிக்கு 14 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. பின்னர் படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகளை மேற்கொண்டதனை தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் ‘செத் பிரித்’ நிகழ்வுகளுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவனத்தில் கையொப்பமிட்டு கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் படைப் பிரிவில் சேவையாற்றும் அனைத்து படையினர் மத்தியில் உரையாற்றியதோடு படைப் பிரிவின் நோக்கக்கூற்று தொடர்பாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் இறுதியில் அனைத்து படையினரும் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பிரிகேட் படைத் தலைமையக தளபதிகள், 64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் பதவிநிலை அதிகாரிகள், , கட்டளை அதிகாரிகள் , அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் இணைந்திருந்தனர். Sport media | Nike Shoes