15th September 2020 20:00:05 Hours
இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்ஷ்மன் பெர்ணாண்டோ அவர்கள் இம் மாதம் (9) ஆம் திகதி பலாலியில் அமைந்துள்ள 5 ஆவது போர்கருவி படையணிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
படையணி தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட வடக்கு முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதியை இந்த படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எஸ்.டி ரங்க அவர்கள் வரவேற்றார்.
பின்னர் முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.
பின்பு தலைமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார் அதன் நிறைவில் இவரது வருகையை நினைவு படுத்தும் முகமாக கட்டளை அதிகாரி அவர்களினால் நினைவுப் பரிசொன்றும் முன்னரங்க கட்டளை தளபதிக்கு வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். பின்பு இவர் புறப்படுவதற்கு முன்பு பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டுச் சென்றார். Sports brands | Nike Air Max 270