15th September 2020 22:50:49 Hours
இனாமலுவையிலுள்ள 53 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் பிரியந்த சேனாரத்ன அவர்கள் விடை பெற்றுச் செல்வதன் நிமித்தம் இவருக்கு தலைமையகத்தில் இம் மாதம் (14) ஆம் திகதி பிரியாவிடை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இவருக்கு படைப் பிரிவு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.
பின்பு இவர் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி மரநடுகையையும் மேற்கொண்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Authentic Sneakers | Nike Shoes