15th September 2020 22:54:52 Hours
பிரிகேடியர் நிஷாந்த மானகே அவர்கள் 53 ஆவது படைப் பிரிவின் 27 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (15) ஆம் திகதி தம்புள்ளையில் அமைந்துள்ள இனாமலுவ தலைமையகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
படைப் பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதிக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
பின்னர் படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகளை மேற்கொண்டு தலைமையக வளாகத்தினுள் உள்ள படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பதவிநிலை அதிகாரிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் , இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர். Sports Shoes | Nike