12th September 2020 10:33:26 Hours
இலங்கை இராணுவத்தில் 34 ஆண்டுகளுக்கு மேலாக சிறந்த சேவையாற்றி ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களுக்கு இலங்கை சமிஞ்சை படையணி தலைமையகத்தில் புதன்கிழமை (9) பிரியாவிடை விழா நடாத்தப்பட்டது.
விழா இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பனாகொடை இலங்கை சமிஞ்சை படையணி தலைமையக வளாகத்தில் பெருந்தொகையான சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினரின் பங்குபற்றலில் நடைபெற்றது.
நிகழ்வில் வரவேற்பு அணிவகுப்பு மரியாதை, உயிர் நீத்த சமிஞ்சை படை வீரர்களின் நினைவு தூபிக்கு மலரஞ்சலி, அணிவகுப்பு மரியாதை, மற்றும் படையினருக்கான உரை என்பன இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் படையணி தலைமையக படையினர் சாப்பாட்டறையில் இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்குமான தேனீர் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்றைய தினம் (9) சமிஞ்சை படையணி அதிகாரிகள் சாப்பாட்டறையில் சமிஞ்சை படையணி படைத் தளபதி மற்றும் சமிஞ்சை படை அதிகாரிகள் நடத்திய இராபோசணத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. bridgemedia | Nike