07th September 2020 16:00:01 Hours
65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான பிரிகேடியர் டிகிரி திசாநாயக அவர்களது கண்காணிப்பின் கீழ் 652 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் பெரேரா அவர்களது தலைமையில் 20 ஆவது (தொ) விஜயபாகு காலாட் படையணியினால் இம் மாதம் 05 ஆம் திகதி அரவிளந்தன்குளம் புனித பிலிப்ஷ் முன்பள்ளி கட்டிடங்கள் திருத்தியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முன்பள்ளியில் 38 மாணவர்கள் கல்விகளை மேற்கொண்டு வருவதுடன் இந்த திருத்தியமைக்கும் பணிகளில் 28 பெற்றோர்கள் பங்கு பற்றினர். இராணுவத்தினரது இந்த செயல்களை முன்னிட்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள் இராணுவத்தினருக்கு நன்றிகளை தெரிவித்தனர். Running sneakers | Nike