04th September 2020 08:43:18 Hours
மேஜர் ஜெனரல் சூல அபேநாயக அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 8 ஆவது புதிய படைத் தளபதியாக இம் மாதம் (3) ஆம் திகதி பனாகொடையில் அமைந்துள்ள தலைமையகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதி அவர்களை கெமுனு காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். பின்பு புதிய படைத் தளபதி அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது பணிமனையிலுள்ள ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பதவியை பாரமேற்றுக் கொண்டார்.
பின்னர் புதிய படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் பணிப்பாளர்கள், மத்திய கட்டளை தளபதிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sportswear free shipping | Air Jordan Release Dates 2020