01st September 2020 10:00:58 Hours
பொது மக்களின் இராணுவம் மீதான நம்பிக்கையை மேம்படுத்தி கொள்ளும் நிமித்தம் யாழ் நண்பர்கள் அமைப்பின் தலைவரும், வட்டுக்கோடை தென்மேற்கு உழவர் சங்கத்தின் தலைவருமான வைத்தியர் சித்தம்பரன் மோகன் தலைமையில் வட்டுக்கோட்டை சங்கானை மேற்கு பிரதேசத்தின் உப்பு வயல் என்ற விவசாய குளம் மீண்டும் தோண்டி புதுபிக்கும் பணிகள் யாழ் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு (31) திங்கட்கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, யாழ் மாவட்ட செயலாளர் திரு கணபதிபிள்ளை மகேஷன், தியாகி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு வாமதேவா தியாகேந்திரன் ஆகியோருடன் இத் திட்டத்திற்காக நிதியுதவி அளிக்கும் ' யாழ் நண்பர்கள்' அமைப்பின் தலைவர் டாக்டர் சித்தம்பரன் மோகன், 51 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க மற்றும் பல பொதுமக்களின் பங்களிப்புடன், இராணுவத்தினரால் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 10 ஆவது பொறியியலாளர் படையணி மற்றும் 11 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையின் படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவம், அர்ப்பணிப்பு பணிகள் மற்றும் இராணுவத்தினரின் ஆள் வலிமையினால் மேற்கொள்ளப்படுகின்றது.
இந் நிகழ்வில் மதப் தலைவர்கள், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, 51 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி அதிகாரி, பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள்,பொது மக்கள் மற்றும் படையினர் பலரும் கலந்து கொண்டனர். buy footwear | Women's Nike Air Max 270 trainers - Latest Releases