Header

Sri Lanka Army

Defender of the Nation

21st August 2020 13:23:51 Hours

பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஒருங்கினைப்பாளர் இராணுவ தளபதியை சந்திப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு இணையதிகாரியான கேர்ணல் சஜாட் அலி அவர்கள் அவரது பணிவு கால நிறைவின் பின்பு தூதரகத்தை விட்டு செல்வதன் நிமித்தம் இன்று (21) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இராணுவ தளபதியவர்கள் 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானால் கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது வழங்கிய தளவாட ஒத்துழைப்பிற்கும் நன்றியை இந்த அதிகாரியுடன் பகிர்ந்து கொண்டு விடைபெற்றுச் செல்லும் இந்த அதிகாரிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இலங்கை ஆயுதப்படைகளுக்கு பாகிஸ்தான் இராணுவத்தின் தொடர்ச்சியான சிறந்த ஆதரவை உறுதிப்படுத்திய கேணல் சஜ்ஜாத் அலி அவர்கள் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணித்த சேவைகளுக்காகவும், தனக்கும் இலங்கைக்கும் இடையில் திறம்பட செயல்படும் உறவுகள் குறித்து நன்றி தெரிவித்தார். இலங்கை ஆயுதப்படைகள். பாக்கிஸ்தானின் ஆயுதப் பிரிவுகளில் உறுப்பினர்களை இலங்கையில் பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு இடமளித்தமைக்கும், அவர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்கியதற்கும் அவர் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்தார்.

இச்சந்திப்பின் இறுதியில் இவர்கள் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. Nike footwear | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp