20th August 2020 19:05:21 Hours
14 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 143 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சிலாப வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இரத்த தானம் இம் மாதம் (19) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
143 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சேனக கஸ்தூரிமுதலி அவர்களது தலைமையில் 16 ஆவது கஜபா படையணி மற்றும் 1 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினால் இந்த இரத்த தானங்கள் வைத்தியசாலையிலுள்ள நோயாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பணிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களது எண்ணக்கருவிற்கமைய 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திலக் ஹங்குலிபொல அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. buy footwear | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp