13th August 2020 11:45:18 Hours
முதலாவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த விஷேட தேவையுடைய சிப்பாய்க்கு வீடொன்றை நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலாள் அவர்களினால் இம் மாதம் (10) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
இராணுவ ரணவிரு சேவா பணியகம் , நன்கொடையாளர்கள் மற்றும் முதலாவது இராணுவ பொலிஸ் படையணியினரது ஒத்துழைப்புடன் இந்த விஷேட தேவையுடைய சிப்பாய்க்கு வீடு நிர்மானிப்பதற்கான உதவிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய சுபசாதனை வீட்டுத் திட்டம் ஐந்தாம் கட்டத்தின் 1.8 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வீடு நிர்மானிக்கப்படவுள்ளது.
முதலாவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த இந்த சிப்பாய் விபத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தின் நிமித்தம் நோய்வாய்ப் பட்டு ‘ராகம ரனவிரு செவன’ நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவருக்கு உதவும் முகமாக இந்த புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் பிரேமலாள் அவர்கள் வருகை தந்து இந்த அடிக்கல்லை நாட்டி வைத்தார். Running Sneakers Store | nike air jordan lebron 11 blue eyes black people