11th August 2020 17:30:29 Hours
பொரலஸ்கமுவ தொலஹேனவத்த வெஹெரகர பகுதியில் இராணுவ புலனாய்வின் தகவலுக்கமைய இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 25 கிலோ கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த 43 வயதான நபர் இன்று (11) ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் இந்த நபர் கைது செய்யப்பட்டு பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு கையளிக்கப்பட்டார்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பரிந்துரைப்பின் பிரகாரம் இந்த போதை தடுப்பு பணிகள் எமது நாட்டில் இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers | Women's Nike Superrep