03rd August 2020 08:45:19 Hours
பிரதி பதவிநிலை பிரதானியும், தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ அவர்கள் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி கதிர்காம கவந்திஸ்ஸபுரவில் அமைந்துள்ள 3 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
மூன்றாவது தேசிய பாதுகாப்பு தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்களை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி மேஜர் எச்.எம்.எல்.பீ சமரகோன் அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் தளபதி அவர்களுக்கு இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு தலைமையக வளாகத்தினுள் அமைக்கப்பட்ட புதிய கட்டிடமொன்றையும் ரிபன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து படைத் தளபதி அவர்கள் தலைமையகத்திலுள்ள படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். பின்பு கட்டளை அதிகாரி அவர்களினால் படையணிகளின் நிருவாகம் மற்றும் பணிகள் தொடர்பான விளக்கங்கள் படைத் தளபதி அவர்களுக்கு முன் வைத்தார்.
இறுதியில் படைத் தளபதி அவர்கள் தலைமையகத்திலுள்ள பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு புறப்பட்டு சென்றார். இச்சந்தர்ப்பத்தில் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Nike Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!