27th July 2020 17:21:48 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் இறுதியில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி பதவியிலிருந்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச்செல்ல விருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்தில் இம் மாதம் (27) ஆம் திகதி சந்தித்தார்.
இராணுவ பணிமனைக்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களை இராணுவ தளபதி அவர்கள் கைகுழுக்கி வரவேற்றார்.
பின்னர் இருவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது கடந்த கால போர்களின் போது தாம் பெற்ற அனுபவம் மற்றும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வசித்த கால கட்டத்தில் சிறப்பான பங்களிப்பை இராணுவத்திற்கு வழங்கியதையிட்டு இராணுவ தளபதி அவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இறுதியில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. இராணுவ தளபதி அவர்கள் இராணுவத்தில் ஆற்றிய பாரிய சேவைகளுக்காக இந்த மூத்த உயரதிகாரிக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். short url link | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD