Header

Sri Lanka Army

Defender of the Nation

19th July 2020 11:26:52 Hours

இராணுவத் தளபதி முன்னாள் படை வீர்ர்களை யாழ்பாணத்தில் சந்திப்பு

சனிக்கிழமை (18) மாலை யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட ஐந்து முன்னாள் படைவீரர்களின் பிரதிநிதிகள் குழுவினர், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட பாதுகாப்புப் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்து கலந்துரையாடினர்.

இராணுவத் தளபதி குறித்த பிரதிநிதிகளுடன் சுதந்திரமாக தொடர்புகொண்டு, அவர்களின் நல்வாழ்வு, கவலைகள் மற்றும் அவர்களின் உடல்நிலைகள் குறித்து விசாரித்தார் மற்றும் அவர்களின் மாதாந்த மருந்து ஒதுக்கீடுகள் தேவைக்கேற்ப வீட்டிற்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய அல்லது குறைந்த சிரமத்துடன் அந்தந்த மருத்துவ நிறுவனங்களை அடைய அவர்களுக்கு வசதி செய்ய யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு அறிவுறுத்தல் வழங்கினார் . யாழ்ப்பாண முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் சார்பாக குறித்த முன்னாள் படைவீரர்கள், விருந்தினருக்கு நன்றி தெரிவித்ததோடு, நாட்டில் அவரது கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பாத்திரங்கள் தொடர்பாக அதிகம் பேசினர். லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, யாழ்ப்பாண சமூகங்களின் நலனுக்காக வடக்கு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான நலன்புரிப் பாத்திரங்களையும், தேசிய அவசரநிலைகள், பேரழிவுகள், வெள்ளம் போன்ற காலங்களில் அனைத்து பொதுமக்கள் மற்றும் நாட்டின் பாதுகாவலர்களாக அவர்கள் வகிக்கும் பங்குகள் தொடர்பாகவும் விளக்கினார். மேலும் அவர்கள் குழு புகைப்படத்திலும் கலந்து கொண்டனர்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவர்களின் அர்ப்பணிப்பு கடந்த சேவைகளைப் பாராட்டி, ஒவ்வொருவருக்கும் ஐந்து பரிசுப் பொதிகளை வழங்கினார், மேலும் அவர்கள் ஓய்வபெற்றவேளையில் நீண்ட ஆயுள் மகிழ்ச்சிக்காகவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களும் இந்நிகழ்வின் போது கலந்து கொண்டார். Running sports | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today