09th May 2020 18:20:31 Hours
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பூனானை(75), கண்டக்காடு(62), விடத்தபாலி(298) ஐயக்கச்சி (80) தியத்தலாவை (05),ஹோட்டல் டொல்பின் (01) மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் நிபுனு பூசா (12) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 533 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் 9 ஆம் திகதி தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர் என 9 ஆம் திகதி கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை, 9 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 6299 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4428 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
அதனடிப்படையில் இன்று 9 ஆம் திகதியுடன் கோவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 409 ஆகும். அனேகமானோர் கடற்படை முகாமிற்கு உள்ளே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -6299
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -4428