06th May 2020 21:21:49 Hours
கடந்த மாதம் போன்று ,நாடு முழுவதிலும் உள்ள பாதுகாப்பு படை தலைமையகங்களின் இராணுவ படையினரால் மே மாதம் 5-6 ஆம் திகதிகளில் ஓய்வூதியம் பெறக் கூடிய ஓய்வூதியதாரர்களுக்கு வான போக்குவரத்தை வழங்கப்பட்டன, இந்த செயற்பாடானது பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.
ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சிரேஷ்ட பிரஜைகளின் நல்வாழ்விற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட இந்த திட்டம், இராணுவத்திற்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள எஸ்.எல்.டி.பி பேருந்துகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது. அதற்கமைய படையினர்கள் குறிப்பிட்ட இடங்களில் இருந்து அவர்களை வங்கிகளுக்கும் தபால் நிலையங்களுக்கும் அழைத்துச் சென்று அவர்களுக்கு உதவின.
அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதன் காரணமாக உதவியற்றவர்களாக மாறிய வயதான ஓய்வூதியதாரர்களுக்கு உதவுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
யாழ், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மத்திய மற்றும் மேற்கு ஆகிய ஏழு பாதுகாப்புப் படைத் தலைமையகங்களிலும் உள்ள படையினர்களால் அந்தந்த பாதுகாப்பு படைத் தளபதிகள், பொது அதிகாரிகள் கட்டளை தளபதிகள் மற்றும் படைப்பிரிவுகளின் கட்டளை தளபதிகளின் மேற்பார்வையில் கீழ் இந்த திட்டத்தை தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டன. Sportswear Design | GOLF NIKE SHOES