02nd May 2020 18:05:13 Hours
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க அவர்கள், பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கோவிட்-19 எதிரபாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய, பொறியிலாளர் சேவைப் படையணியின் படையினரால், தேசிய மனநல வைத்தியசாலை வளாகத்தினுள் உள்ள கைவிடப்பட்ட கட்டிடமானது உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளுக்காக புனரமைக்கப்பட்டதுடன் புதன்கிழமை 29 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டிடமானது புனரமைக்கப்பட்டு பொது மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதனால் கடுமையாக மனநலரீதியாக பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க, பொறியிலாளர் சேவைப் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர் கனேகொட, 1 ஆவது பொறியிலாளர் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி , அதிகாரிகள்,வைத்தியசாலை ஊளியர்கள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் குறித்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர். Nike Sneakers | Jordan Shoes Sale UK