01st May 2020 13:07:52 Hours
புதிய ஜனாதிபதி செயலனியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட மேல் மாகாண ஆளுனரும், விமானப்படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக மற்றும் ஜனாதிபதி செயலனியின் உயரதிகாரியான ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, பதவி நிலை உத்தியோகத்தர் மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன, 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எம்.டி.பி ஹங்கிலிபொல போன்ற அதிகாரிகள் மட்டக்குளியில் அமைந்துள்ள 6 ஆவது கெமுனு ஹேவா படையணி, களனியிலுள்ள 2 ஆவது இலேசாயுத காலாட் படையணிக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை நேற்று (30) ஆம் திகதி மேற்கொண்டனர்.
பின்பு இந்த அதிகாரிகளின் தலைமையில் 14 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் முப்படையினரது சுகாதார பாதுகாப்பைக் கையாள்வது தொடர்பாக இந்த உயரதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றன.
மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களது எண்ணக்கருவிற்கமைய முப்படையினரது சுகாதார நிலைமைகளை ஆராயும் நோக்கத்துடன் இந்த செயலனியானது தற்போது செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.. affiliate tracking url | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth