Header

Sri Lanka Army

Defender of the Nation

21st April 2020 17:00:01 Hours

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்த 149 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

பூனானை இராணுவ தனிமைப் படுத்தப்பட்ட மையங்களிலிருந்த 146 பேரும், கடற்படையினால் நிர்வாகித்து வரும் பூசா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலுள்ள 3 பேரும் தங்களது சுகாதார பரிசோதனைகளின் பின்பு இன்று (21) ஆம் திகதி தங்களது விடுகளுக்கு இராணுவத்தினரது போக்குவரத்து வசதிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொட்டாவ, அகுரன, கொழும்பு மற்றும் மஹியங்கன பிரதேசங்களைச் சேர்ந்த 149 பேர் தனிமைப் படுத்தப்பட்ட மையங்களிலிருந்து பரிசோதனை சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்கு இராணுவத்தினரினால் உணவு வகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இவர்கள் வீடுகளுக்கு செல்லும் போது கட்டளை தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் இவர்களை வழி அனுப்பி வைத்தனர். Buy Sneakers | Zapatillas de running Nike - Mujer