08th April 2020 14:34:36 Hours
அர்ப்பணிப்புள்ள இலங்கை இராணுவ மூத்த அதிகாரிகளில் ஒருவரான, மத்திய பாதுகாப்புப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதனை முன்னிட்டு பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை புதன்கிழமை 8 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
ஓய்வு பெற்றுச் செல்லும் பெரும்பாலான மூத்த அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவிக்கும் நடைமுறையைத் கொண்டிருக்கும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மேஜர் ஜெனரல் வடுகே அவர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு கடந்தகால நினைவுகளை நினைவு கூர்ந்தார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த அமைப்பில் மற்றும் இலங்கை சிங்க படையணியில் வேவையாற்றிய மேஜர் ஜெனரல் வடுகே அவர்கள் குறிப்பாக தற்போதைய நியமணத்திற்கு முன்னர் பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.
ஓய்வு பெற்றுச் செல்லும் மூத்த அதிகாரி இராணுவத் தளபதியின் பாராட்டிற்கும் சிந்தனைக்கும் தனது நன்றியினை தெரிவித்தார். இறுதியில், லெப்டினன் ஜெனரல் சில்வா ஓய்வு பெற்றவருக்கு அவரது பாராட்டுக்கு அடையாளமாக ஒரு சிறப்பு நினைவு சின்னத்தினை வழங்கினார். பின்னர் இராணுவத் தளபதிக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது. Sports brands | UK Trainer News & Releases