Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2019 16:33:44 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் பாதுகாப்பு தலைமைப் பிரதானியவர்களுக்கான விருந்துபசார நிகழ்வு

ஓய்வு பெற்றுச் செல்லும் பாதுகாப்பு தலைமைப் பிரதானியான அத்மிரால் சி விஜேகுணவர்தன அவர்களுக்கான இரவு நேர விருந்துபசார நிகழ்வுகள் முப்படைத் தளபதியகள் உயர் அதிகாரிகள் போன்றோரின் பங்களிப்போடு கிங்ஸ்பெரி ஹோட்டலில் 2019ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி இடம் பெற்றது.

இவ்வாறு வருகை தந்த தலைமைப் பாதுகாப்பு பிரதானி மற்றும் அவரது பாரியார் போன்றோர் முப்படைத் தளபதிகள் மற்றும் அவர்களது பாரியார் போன்றோரால் வரவேற்கப்பட்டனர். இதன் போது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் தளபதியவர்கள் தெரிவிக்கையில் நாட்டின் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கொடிய போர் சூழலின் போது பாதுகாப்பு தலைமைப் பிரதானியவர்கள் பல சிரமத்தின் மத்தியில் சேவையாற்றியுள்ளார்.

மேலும் அத்மிரால் விஜேகுணரத்தின அவர்கள் தமது பாரிய சேவையின் மூலம் பலவாறான பதக்கங்களைப் பெற்றுள்ளார். அந்த வகையில் வீரோதார விபூஷன ரண விக்கிரம மற்றும் ரண சூர பதங்கம் போன்ற பதங்கங்களைப் பெற்றுள்ளனர். அத்துடன் அவர் சமச்சீரற்ற கடற்படைப் போர் மற்றும் சிறு படகு நடவடிக்கைகள் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.

அந்த வகையில் இவ் அதிகாரியவர்கள் தமது பிஎஸ்ஸி (விசேட) பட்டப் படிப்பை பாகிஸ்தான் கராச்சி பல்கலைக் கழகத்தில் 1996ஆம் ஆண்டு மேற்கொண்டார். மேலும் எம்பிஹில் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு கல்வி (முதல் பிரிவில் தேர்ச்சி)போன்றவற்றை இந்தியாவில் மதுரையில் 2010 ஆண்டு மேற்கொண்டு;ள்ளார். மேலும் இவர் சிறந்த விளையாட்டு வீரராக கடற் படையின் ரக்பி காற்பந்தாட்;டம் மற்றும் படகோட்டல் போன்றவற்றில் சிறந்து விளங்கியுள்ளார். மேலும் இவர் இலங்கை கடற்படையில் கொல்ப் தொடர்பான விளையாட்டை அறிமுகம் செய்தவராக காணப்படுகின்றார். அத்துடன் இவர் கடற்படை சயுர எனும் பிரிவில் பணியாற்றியுள்ளார். அத்துடன் இந்தியாவில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முதலாவது பாதுகாப்பு ஆலோசகராக கட்ளைக் கொடி அதிகாரியான கடற்படையின் விசேட பிரிவின் பணிப்பாளராகவும் கடல் சார் கண்காணிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளராகவும் எல்ரீரீஈ பயங்கரவாதிகளிற்கெதிரான இறுதிப் போர் சூழலில் 2006 மற்றும் 2007ஆம் ஆண்டு காலாப் பகுதிகளில் சிறந்த அதிகாரியாகவும் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு போன்ற பிரதேசங்களில் சிறந்த பதவிநிலைப் பிரதானியாகவும் சேவையாற்றியுள்ளார்.

மேலும் இவர் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி கடற் படைத் தளபதியாக பதவியேற்றார். பதவிநிலைப் பிரதானியான 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் திகதி சேவையாற்றியுள்ளார். 2015ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த படகு தொடர்பான செயலாற்றல் அதிகாரியாகவும் செயற்பட்டுள்ளார்.

ஆந்த வகையில் பாதுகாப்பு தலைமைப் பிரதானியவர்களுக்கான விருந்துபசார நிகழ்வானது முப்படைத் தளபதிகள் மற்றும் அவர்களது பாரியார் உயர் அதிகாரிகள் போன்றோரின் தலைமையில் இடம் பெற்றது.jordan release date | AIR MAX PLUS