Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2019 16:35:44 Hours

விடை பெற்றுச் செல்லும் பாதுகாப்பு தலைமை பிரதானிக்கு முப்படை அணிவகுப்பு மரியாதைகள்

பாதுகாப்பு சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியான அத்மிரால் ரவீந்திர சி விஜயகுணரத்ன அவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் (31) ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச ஞாபக மண்டப வளாகத்தினுள்ள பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகத்தில் வைத்து முப்படை அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

அணிவகுப்பு மரியாதை நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு தலைமை பிரதானியான அத்மிரால் விஜயகுணரத்ன அவர்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வரவேற்றார். பின்னர் முப்படையினரால் இராணுவ சம்பிரதாய அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார். பின்னர் பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகத்தினால் தேநீர் விருந்துபசார நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பதில் பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியர் அத்மிரால் ஆனந்த பீரிஸ், முப்படைத் தளபதிகள் இணைந்திருந்தனர்.

பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகம் 1985 ஆம் ஆண்டு கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகமாக முப்படை மற்றும் பொலிஸ் அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டு கூட்டு நடவடிக்கை இரகசிய தலைமையகமாக விளங்கி 2009 ஆம் ஆண்டு 35 ஆவது இலக்கத்தின் கீழ் பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகமாக மாற்றியமைக்கப்பட்டன.

இவர் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி 2015 அன்று கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி அன்று பாதுகாப்புப் தலைமை பிரதானியாக நியமிக்கப்பட்டார். கடற்படைத் தளபதியாக இவர் இருந்த சமயத்தில் இலங்கை கடற்படையில் இரண்டு பட்டாலியன்களை அமெரிக்க கடற்படையினரின் ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு நிறுவினார்.

மேலும் ஓய்வு பெற்றுச் செல்லும் பாதுகாப்பு தலைமை பிரதானிக்கு பிரியாவிடை நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.affiliate link trace | adidas Yeezy Boost 350