Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2019 20:30:27 Hours

ஓய்வு பெற்றுச் செல்லும் பொறியியல் பிரதானிக்கு கௌரவ மரியாதை

இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரதானியான மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்கள் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லவிருப்பதால் அவருக்கு இம்மாதம் (25) ஆம் திகதி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்களை பொறியியல் படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் ரவீந்திர டயஸ் அவர்கள் வரவேற்று பின்னர் பொறியியல் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்த உயரதிகாரி படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தி படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நேநீர் விருந்தோம்பல் நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்தார்.

மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்கள் இலங்கை இராணுவத்தில் 1985 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி கெடற் அதிகாரியாக இணைந்து இராணுவ எகடமியில் பயிற்சிகளை நிறைவு செய்து இராணுவ பொறியியல் படையணியின் உட்புகுத்தப்பட்டார். இவரது இராணுவ 34 வருட சேவை காலங்களினுள் மன்னார் மாவட்ட கட்டளை தளபதியாகவும், 11, 54, 56, 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும் பணிபுரிந்து இறுதியில் இராணுவ பொறியியல் பிரதானியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க வியடமாகும்.trace affiliate link | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!