25th September 2019 23:10:37 Hours
மேஜர் ஜெனரல் ஆர் கே பீ எஸ் கெடகும்புர அவர்கள் விஜயபாகு காலாட் படையணியின் 18 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (24) ஆம் திகதி குருணாகலையிலுள்ள போயகன தலைமையில் தனது பதவியை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாய் பதவியேற்ற படைத் தளபதிக்கு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதி அவர்கள் தலைமையகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தினார்.
பின்பு தலைமையக வளாகத்தினுள் தளபதி அவர்களினால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.
இச்சந்தர்ப்பத்தில் மத்திய கட்டளை தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Running Sneakers | Men’s shoes