17th September 2019 19:20:08 Hours
பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் இராணுவ அதிகாரிகள் துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் 6 ஆவது கட்டளை தளபதியாக இம் மாதம் (16) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது பதவியை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.
துறைசார் அபிவிருத்தி நிலையத்திற்கு வருகை தந்த புதிய கட்டளை தளபதியை இந்த நிலையத்தின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் L.D.S.S லியனகே அவர்கள் வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.
இங்கு வந்த கட்டளை தளபதியவர்கள் படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தினார். பின்பு அங்குள்ள அதிகாரிகள் புதிதாய் வந்த கட்டளை தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பதவியேற்பு நிகழ்வின் போது அந்த நிலையத்திலுள்ள பிரதான பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கட்டளை தளபதியின் பணிமனையில் இணைந்து கொண்டனர்.
இந்த நிலையத்தின் முன்னாள் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் D.M.D.C.D குணவர்தன அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதன் நிமித்தம் இந்த பதவிக்கு புதிய கட்டளை தளபதி அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளராக கடமை புரிந்து இடமாற்றம் நிமித்தம் இங்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Buy Sneakers | nike