23rd August 2019 20:01:56 Hours
பனாங்கொடையிலுள்ள இலங்கை பொறியியலாளர் படையணி தலைமையகத்தில் முற்றாக புனரமைக்கப்பட்ட ஸ்குவெஷ் விளையாட்டு தொகுதியினை முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வெள்ளிக் கிழமை 23 ஆம் திகதி வைபவரீதியாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடந்து, இத்திறப்புவிழாவில் கலந்து கொண்ட 22 ஆவது இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இரண்டு விளையாட்டு கட்டிடத் தொகுதியினை திறந்து வைத்ததோடு, புனர் நிரமாணப் பணிகளை மேற்கொண்ட 4இலங்கை பொறியியலாளர் படையினரை பாராட்டினார்.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இலங்கை பொறியியலாளர் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, இலங்கை இராணுவ பிரதான பொறியியலாளர் மேஜர் ஜெனரல் திஸ்ஸ நானயகார, பொறியியலாளர் படைத் தளபதிகள், இராணுவ பொறியியலாளர் படையணியின் மத்திய தளபதி, முன்னய மத்திய தளபதிகள், ஓய்வு பெற்ற சாப்பெர்ஸ் ஸ்குவெஷ் வீரர்கள் மற்றும் இலங்கை பொறியியலாளர் படையணியின் அனைத்து படையினரின் பங்களிப்புடன் இத்திறப்பு விழாவானது இடம்பெற்றன. Best Authentic Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ