03rd August 2019 15:44:35 Hours
மேற்கு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 14ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 141 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் 08ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் களனி உடுபிலவில் அமைந்துள்ள வைஎம்பிஏ முதியோர் இல்லதின் வயோதிபர்களுக்கான மதிய உணவானது கடந்த திங்கட் கிழமை (29) வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து படையினரால் இவ் வயோதிப இல்லம் சுத்திகரிக்கப்பட்டதோடு இவ் வயோதிபர்களின் அடிப்படை சுத்தத்தை பேணும் நோக்கில் தலைமுடி தாடி போன்ற வெட்டி சுத்தப்படுத்தப்படுத்தினர். அதன் பின்னர் இவ் வயோதிபர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து மதிய உணவும் வழங்கப்பட்டது.
இச் சமூக சேவை நிகழ்வில் கட்டளை அதிகாரிகள் படையினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Sports brands | Air Jordan Release Dates 2021 Updated , Gov