02nd August 2019 15:28:43 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமா ஜயபத்திரன அவர்களது பூரன ஏற்பாட்டில் நன்கொடையாளியான திருமதி லாலனி வசந்த மொரஹொட அவர்களது அனுசரனையில் தர்மாரத்ன வித்தியானந்த பிரிவென மற்றும் மடுகந்த தலதா விகாரைக்கு பாடசாலை உபகரணங்கள் ஜூலை மாதம் (30) ஆம் திகதி நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு நிகழ்விற்கு 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் நன்கொடையாளியான திருமதி லாலனி வசந்த மொரஹொட அவர்கள் வருகை தந்து இந்த பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்திருந்தனர். bridge media | Nike nike dunk high supreme polka dot background , Gov