02nd July 2019 08:39:39 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் நன்கொடையாளர்களது அனுசரனையில் யாழ் குடாநாட்டில் வசிக்கும் முதியோர்கள் மற்றும் விஷேட தேவையுடைய நபர்கள் 17 பேருக்கு சக்கர நாற்காலிகளும், பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கொடையாளர்களான டொக்டர் வாசுகி ஹரிகரன் மற்றும் திரு நிர்மலன் செல்வதோராஜ் மற்றும் பிரபா லோகநாதன் அவர்களது அனுசரனையுடன் இந்த பொருட்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகள் சுழிபுரம் தோலபுரம் பத்தனி வைரவர் ஆலயத்தில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
மேலும் நன்கொடையாளரான திரு ரவி மகேந்திரன், சமூக நலன்புரி அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர். latest Nike Sneakers | Nike Air Max