17th May 2019 20:59:56 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களின் வழிகாட்டலின் கீழ் வங்கி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது அன்மையில் இடம் பெற்றது.
இக் கருத்தரங்கில் கிளிநொச்சி பிரதேச மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி போன்றவற்றின் 24 வங்கி அதிகாரிகள் போன்றோர் 57ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் ஏ எஸ் ஹேவவிதாரன அவர்களின் கண்காணிப்பின் கீழ் 571ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் எஸ் ஏ என் டீ எதிரிசிங்க மற்றும் 7ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி போன்றவற்றின் கட்டளை அதிகாரிகளின் இணைப்பில் இடம் பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
மேலும் இரு வங்கிகளைச் சேர்ந்த சிவில் தொடர்பாடல் இணைப்பாளர்கள் 571ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் 7ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகள் போன்றோர் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். Authentic Sneakers | Autres