17th May 2019 20:59:55 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 64 68 மற்றும் முல்லைத்தீவு முன்னரங்க பாதுகாப்பு வலய படையினர் உள்ளடங்களாக 500ற்கும் மேற்பட்ட படையினரின் பங்களிப்புடன் செவாக் மற்றும் படையினரின் (மே 19) நினைவு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு போதனா வைத்தியசாலைக்கான இரத்ததானம் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக் கிழமை(16) இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இவ் இரத்ததான நிகழ்வானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் வழிகாட்டலில் 59ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரிய அவர்களின் கண்காணிப்பில் தமிழ் மக்கள் மற்றும் படையினரிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கிலும் செவாக் மற்றும் உயிர் நீத்த படையினரின் நினைவை முன்னிட்டு நாடாத்தப்பட்டது.
இதன் போது 500ற்கும் மேற்பட்ட படையினர் மற்றும் பொது மக்கள் போன்றோரின் பங்களிப்புடன் முல்லைத்தீவு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் வழங்கப்பட்டதுடன் இந் நிகழ்வுகள் காலை 0700மணியளவில் ஆரம்பிக்கப்பட்டன. latest Nike Sneakers | Nike for Men