Header

Sri Lanka Army

Defender of the Nation

04th May 2019 20:47:48 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வீடு நிர்மானிப்பதற்கான உதவிகள்

ஜயந்திபுர பதவி சிறிபுர பிரதேசங்களில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வீடு நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது எண்ணக் கருவிற்கமைய 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் 622 ஆவது தலைமையகத்தின் தலைமையில் 5 பிள்ளைகள் உள்ளடக்கப்பட்ட ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு வீடு ஒன்றை நிர்மானிப்பதற்கு முன்வந்தனர்.

இதற்கு 5 மாதங்களுக்கு முன்பு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு 6 வீடுகள் நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த திரு லெஷ்லி சமன் மாரசிங்க அவர்களது நிதி அனுசரனையுடன் இந்த வீடு நிர்மானிக்கப்பட்டு குடிநீர் மற்றும் மின்சார வசதிகளுடன் வழங்கப்படும். இந்த நிர்மான பணிகள் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேர்ணல் பதவி நிலை அதிகாரி அனில் பீரிஸ் அவர்களது ஒருங்கினைப்புடன் மேற்கொள்ளப்படும்.

இந்த அடிக்கல் வைக்கும் நிகழ்வில் 62, 622 ஆவது படைத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரிகள், 9 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, பதவி ஜயந்திபுர மத்திய கல்லூரியின் அதிபர் திரு எச்.எம்.ஜி.கே பண்டார, வீட்டு உரிமையாளர் திரு அஜித் பிரேமகுமார மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். Running sport media | Buy online Sneaker for Men