03rd May 2019 18:52:27 Hours
மான்புமிகு பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்கள் (3) ஆம் திகதி காலை உதிர்த்த ஞாயிறு (21) ஆம் திகதியன்று குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற மட்டக்களப்பில் அமைந்துள்ள சயோன் தேவாலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
பின்னர் மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு ஒருங்கினைப்பு ஒன்றுகூடலிலும் கலந்து கொண்டார்.
பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போது, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் உதிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும்,பாதுகாப்பு படைகளின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் மற்றும் பாதுகாப்பு உறுதிப்பாடு தொடர்பாக பிரதமருக்கு விளக்கமளித்தார்.
பின்னர் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் பிரதமர் மற்றும் அவரது பிரதிநிதிகளை மட்டக்களப்பு சயோன் தேவாலயத்திற்கு அழைத்து சென்று அந்த தேவாலயத்தின் அருட் தந்தை ரொஷான் மகேஷன் அவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின்னர் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் என்னால்நாட்டில் மீண்டும் சுமூகமான நிலைமையை கொண்டுவருவதற்கும் , வேண்டியசவால்களுக்கு முகமளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இச்சந்தர்ப்பத்தில் அருட் தந்தை ரொஷான் மகேஷன், மட்டக்களப்பு பிரதேச செயலாளர் திரு. எம் உதய குமார, பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, கடற்படை, விமானப்படை உயரதிகாரிகள் இணைந்திருந்தனர். affiliate tracking url | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf