26th April 2019 20:17:20 Hours
(26) ஆம் திகதி வெள்ளிக் கிழமை பிப 7.00 மணியளவில் கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜும்மா பள்ளி வாசலுக்கருகில் சந்தேகத்திற்கிடமான இடங்களை சோதனை இடும் போதுதுப்பாக்கி சூடு சம்பவம் இடம் பெற்றது.
இலங்கை இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட படையினரால் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது தற்கொலைக் குண்டுகளும் வெடிபொருட்களும் தயாரித்து மறைத்து வைத்திருந்த தற்கொலைவாதிகள் 5-6 நபர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
இதற்கிடையில் சம்மாந்துரை பிரதேசத்தில் (26)ஆம் திகதி வெள்ளிக்கிழமை மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது இராணுவத்தினரால் ISIS கொடிகளை மீட்டதுடன் ஒரு இடத்தில் இருந்து சில வெடி பொருட்கள் தயாரிக்கும் பயங்கரவாத அமைப்பின் ஆணையின்படி நடக்கும் இடம் போன்றன கண்டுபிடிக்கப்பட்டன. best Running shoes brand | Nike Air Max 270