28th March 2019 10:45:35 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் இம் மாதம் (23) ஆம் திகதி ஆண்களுக்காக இடம்பெற்ற தேசிய படகோட்ட போட்டியில் பங்கு பற்றி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கு இராணுவ தளபதி இம் மாதம் (27) ஆம திகதி தியவன்ன ஓயா ‘எட்ஜ்ஹோட்டலிற்கு சென்றார்.
அங்கு சென்ற இராணுவ தளபதியை இராணுவ விளையாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுத்தசிங்க அவர்கள் வரவேற்றார். பின்னர் இராணுவ தளபதி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ படகோட்ட வீரர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அவர்களுக்கு மேலும் அறிவுறுத்தல்களை வழங்கி ஊக்குவித்தார்.
அச்சந்தர்ப்பத்தில் இலங்கை படகோட்ட சங்கத்தின் தலைவர் திரு பி.டி பெரேரா, தேசிய முகாமையாளர் திரு. தனுன, இராணுவ படகோட்ட சங்கத்தின் தலைவர் கேர்ணல் விபுல இகலஹே, விஷேட படையணியின் பிரிக்கட் படைத் தளபதி லெப்டினன்ட் கேர்ணல் அசங்க பெரேரா, இராணுவ படகோட்ட சங்கத்தின் செயலாளர் மேஜர் வசந்த திசாநாயக போன்றோர் இணைந்திருந்தனர். latest Nike release | Klær Nike