Header

Sri Lanka Army

Defender of the Nation

28th March 2019 10:56:24 Hours

இராணுவத்தினரால் அம்பாறை மற்றும் திருகோணமலையில்காணிகள் விடுவிப்பு

குச்சவேலி பிரதேச செயலாளர் சபைக்குரிய திரியாய் பிரதேசத்தில் தனியாரது 03 ஏக்கர் நிலப்பரப்புகளும், பெரியநிலாவெலின் பிரதேசத்தில் 0.5 ஏக்கர் நிலப்பரப்புகளும் அம்பாறைக்கு கீழுள்ள கல்முனை பிரதேச செயலகத்தில் 02 ஏக்கர் நிலப்பரப்புகள் பிரதி மாவட்ட செயலாளர் அவர்களது ஏற்பாட்டில் கிழக்கு ஆளுனர் அலுவலகத்தில் வைத்து இம் மாதம் (25) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

நான்காவது கட்டத்தின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களினால் இந்த காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஷ்புல்லா அவர்களுக்கு கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆளுனரின் செயலாளர் திரு ஜே.எஸ்.டீ.எம்.ஏ அபேவர்தன, திருகோணமலை பிரதி மாவட்ட செயலாளர் என் பிரதீபன், அம்பாறை பிரதி மாவட்ட செயலாளர் சி.யூ நாணயக்கார, 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் வன்டித்த மஹின்கந்த, 221 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் பிரியந்த காரியவஷம் போன்றோர் இணைந்திருந்தனர். Sports brands | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5