Header

Sri Lanka Army

Defender of the Nation

25th March 2019 14:44:16 Hours

போர் வீரர்களின் உச்ச தியாகங்களை நினைவூட்டும்நிகழ்வு

இராணுவத்தின் பிரதான நிகழ்வுகளில் ஒன்றான இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டுநெத் வானொலி மற்றும் கொழும்பு தொலைக்காட்சியின் ஒத்துழைப்புடன் கஜபா படையணியின் பங்களிப்புடன் இடம்பெற்ற ‘ஜெதவாணராமய’ போர் வீரர்களின் தியாகங்களை நினைவூட்டும் நிகழ்வு இம் மாதம் (23) ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது நாட்டிற்காக உயிரிழந்த படை வீர ர்களுக்காக கஞ்சுக பூஜை, அஷ்டாபான பூஜை,சதுமதுர/ கிலன்பாச பூஜைகள் கலிகமுவ ஞானதீப தேரர்களின் தலைமையில் இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரை கௌரவித்து இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் 'அனுசனவா' வென் இஹல ஹால்மில்லேவ ரணனபால நயாக தேரர் அவர்களினால், ஐந்து கட்டளைகளை கடைப்பிடித்தபின், ஜெத்தவனராமய விஹாராதிபதியினால் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் படையினரது தியாகங்களை கௌரவித்தும், இந்த நிகழ்விற்கு இராணுவ தளபதி வழங்கிய ஒத்துழைப்பையும் கௌரவித்து உரையினை நிகழ்த்தினார்.

யுத்த வீரர்கள் சுமார் 3000 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் ,கஜபா படையணியைச் சேர்ந்தவீரர்களின் 20,000 க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் கஜபா படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ்,கேர்ணல் மஹிந்த ராஜபக்‌ஷ, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், சேவா வனிதா பிரிவின் தலைவி, ‘நெத்’ எப் எம், கொழும்பு தொலைக்காட்சி அதிகாரிகள் இணைந்திருந்தனர்.Sports News | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ