14th March 2019 19:43:38 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு சுகாதார வசதிகள் நிமித்தம் கழிவரைகள் சுத்தப்படுத்துவதற்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பொருட்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் சாவகச்சேரி திருமல்லூவர் சமூக நிலையத்தில் வைத்து இம் மாதம் (10) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்ற மேயர் திருமதி ராமநாதன் சிவமங்கை, நகராட்சி மன்ற அங்கத்தவர் திருமதி பாலுனி சுபோதினி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில், யாழ் படைத் தளபதி 10 பாக்கெட்டுகளை சுகாதாரப் பங்கிட்டு மற்றும்துப்புரவுப் பாட்டில்களை அந்த ஏழை குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.யாழ் படைத் தலைமையகத்தினால் கடந்த ஒரு வருடத்திற்குள், அந்த பகுதிகளில் வாழும் வறிய குடும்பந்தாருக்கு 50 க்கும் மேற்பட்ட கழிப்பறைகளை ஏற்கனவே கட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Asics footwear | Jordan Release Dates , Iicf