Header

Sri Lanka Army

Defender of the Nation

07th February 2019 12:52:45 Hours

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணிகள்

கம்பஹா பிரதேச செயலக பிரிவிற்குரிய பிரதேச 3.45 சுற்று வட்டாரத்தில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சிரமதான பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

இந்த சூறாவளி (5) ஆம் திகதி ஏற்பட்டது. அதன்போது 83 குடும்பத்தைச் சேர்ந்த 242 அங்கத்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 141 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் எம். கே ஜயவர்தன அவர்களது தலைமையில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகளில் 141 ஆவது படைத் தலைமையகத்தின் 16 படை வீரர்களும், 8 ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த 22 இராணுவத்தினரும் பங்கு பற்றிக் கொண்டனர். Best jordan Sneakers | Men’s shoes