02nd January 2019 18:10:46 Hours
இலங்கை இராணுவத்தில் ‘எழுதுவினைஞர்’ பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவத்தினரது வெளியேற்ற நிகழ்வு இராணுவ பொது சேவைப் படையணியினிக்குரிய குடிகல இராணுவ பயிற்சி முகாமில் இடம்பெற்றது.
இந்த பயிற்சிகள் பயிற்சி இல – 58 இன் கீழ் நிரந்தரம் மற்றும் தொண்டர் படையணியைச் சேர்ந்த இராணுவத்தினர் நிறைவு செய்தனர். பயிற்சிகள் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெற்றது.
எழுதுவினைஞர் பயிற்சியின் ஊடாக இராணுவத்தின் நிர்வாக பணிகள், ஒழுங்கு முறைகள், விடுமுறைகள், சம்பளம் தொடர்பான விதிமுறைகள் உள்ளடக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த பயிற்சியின் மூலம் அறிவுரைகள் வழங்கி கற்பிக்கப்பட்டன.
இந்த பயிற்சி நெறியை சிறந்த முறையில் பின்பற்றி பெறுபேறுகளை போர் வீரன் ஆர்.எம்.எஸ்.எஸ் ரத்னாயக அவர்கள் பெற்றுக்கொண்டார். எழுதுவினைஞர் பயிற்சிகளை இராணுவத்திலுள்ள 85 பேர் மேற்கொண்டனர்.
இந்த பயிற்சி நிறைவு நிகழ்விற்கு பிரதம அதிதியாக இப் பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரி கேர்ணல் சாலிய பத்மசாந்த அவர்கள் வருகை தந்து பயிற்சிகளை சாதகமான முறைகளில் நிறைவு செய்து தேர்ச்சிகளை பெற்ற இராணுவத்தினருக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். Sports News | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092