28th December 2018 17:02:49 Hours
இலங்கை இராணுவத்தின் 224 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சுகாதார அதிகாரிகளின் பங்களிப்புடன் மூதூர் தஹ்வாநகர், இக்பால்நகர் மற்றும் அலீம்நகர் போன்ற பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு பணிகள் டிசம்பர் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டன.
22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஏ.என்.எம் வீரசிங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் மூதூர் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம் ரிஷ்வி அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
இந்த டெங்கு ஒழிப்பு பணிகளின் போது 1260 வீடுகள் இந்த அதிகாரியினால் பரசீலனை செய்யப்பட்டது.Best Sneakers | New Releases Nike