13th November 2018 11:40:00 Hours
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் தேவம்பிட்டி கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையினால் தமது பாடசாலை வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்குமாறு 19ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணிக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இப் படையினரால் பாதுகாப்பு வேலிகள் கட்டமைத்து வழங்கப் பட்டுள்ளது.
அந்த வகையில் 65ஆவது படைத் தலைமைய தளபதியான பிரிகேடியர் வசந்த குமரப்பெரும அவர்களின் வழிகாட்டலின் கீழ் 651ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ரஞ்சித் அபேசிங்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் 16படையினர் கடந்த திங்கட் கிழமை (12) இப் பாடசாலை ஆசிரியர்கள் ஊழியர்களின் ஒத்துழைப்போடு இப் பணிகளை மேற்கொண்டனர்.
மேலும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இராணுவத்தினருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
அதேவேளை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயற்கும் 653ஆவது படைப் பிரிவின் 21ஆவது தொண்டர் இலங்கை இலேசாயூத காலாட் படையணியினரால் கடந்த செவ்வாய்க் கிழமை (13) ஐயன்குளம் பிள்ளையார் கோவில் வளாகம் சுத்திகரிக்கப்பட்டது.
அந்த வகையில் 65ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களின் வழிகாட்டலின் கீழ் 653ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ரொபின் ஜயசூரிய அவர்களின் கண்காணிப்பின் கீழ் 30 படையினர் இச் சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். Asics shoes | UOMO, SCARPE