13th November 2018 11:35:48 Hours
61ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் கே டீ சி ஜி ஜெ திலகரத்தின அவர்களின் வழிகாட்டலின் கீழ் 613ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 26ஆவது இலங்கை இலேசாயூத காலாட் படையணி மற்றும் 24ஆவது கஜபா படையணியினரால் மடு மாதா ஆலயத்தில் சிரமதானப் பணிகள் கடந்த திங்கட் கிழமை (12) மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் வருகை தரும் இடமாகக் காணப்படும் இவ் ஆலயத்தில் டெங்கு அச்சுறுத்தலை தடுக்கும் நோக்கில் இவ் ஆலயத்தின் அருட்தந்தை பெப்பி சூசை அவர்களால் படையினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் 613ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கே எல் எஸ் எஸ் லியனகே அவர்களின் கண்காணிப்பில் இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. buy shoes | nike air max 95 obsidian university blue book list