05th November 2018 19:55:41 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியாவெலி உத்தங்கேணி பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இம்முறை பொது சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு கருத்தரங்கு (3) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்றது.
இந்த கருத்தரங்கில் 320 பாடசாலை மாணவர்கள் சமூகமளித்தனர். வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் எல். சதீஸ் குமார் மற்றும் வவுனியா சாதுவன் குளம் மத்திய கல்லூரியின் ஆசிரியரான ஈ. சாதுவன் அவர்கள் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷயந்த ராஜகுரு அவர்களது எண்ணக்கருவிற்கமைய 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.
ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் திரு கஜநாயக மற்றும் முள்ளியாவளை இலங்கை வங்கியின் முகாமையாளர் திரு ஜயந்த அவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றிய மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கி கௌரவித்தனர்.
இந்த கருத்தரங்கில் பங்கேற்றிய 320 பாடசாலை மாணவர்களுக்கு 120,000/= பெறுமதி மிக்க பரிசுப் பொதிகள் இலங்கை வங்கியின் அனுசரனையில் வழங்கப்பட்டது. 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி, 591, 593 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதிகள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர். Sports brands | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals