01st November 2018 16:14:27 Hours
‘வனரோப’ தேசிய மர நடுகை திட்டத்தின் கீழ் ‘ரணவிரு ஹரித அரண’ கருத் திட்டத்திட்டத்தின் கீழ் 14 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் அனைத்து படையினரின் பங்களிப்புடன் (27) ஆம் திகதி சனிக்கிழமை மர நடுகை நிகழ்வு இடம் பெற்றது.
அதற்கமைய, 14 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுஹேரா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, 143 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 16 ஆவது கஜபா படையணி மற்றும் 1ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினரின் ஒத்துழைப்புடன் இந் நிகழ்வு முழுமையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இராணுவ விவசாயம் மற்றும் வள பணியகத்தின் வழிகாட்டலின் கீழ் 100 மரக் கன்றுகள் நடுகையிடப்பட்டது.
அவற்றில் ரம்புட்டான், தூரியன், மஹோகனி, பலா, மா கன்று,கும்புக், தேக்கை, கருங்காளி, பாவட்டா, தோடம், மாதுளை, தென்னை, போன்ற மரக் கன்றுகள் நடப்பட்டன. Asics shoes | Womens Shoes Footwear & Shoes Online