29th October 2018 19:34:09 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழ் நாகவிகாரையிலும், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாங்குளம் ஶ்ரீ சுகத விகாரையிலும் ‘கடின’ பெரஹர நிகழ்வுகள் ஒக்டோபர் மாதம் 27 – 28 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் மஹா சங்க தேரர் அவர்களின் பௌத்த சமய ஆசிர்வாத பூஜைகளுடன் யாழ் இந்திய தூதரகத்தின் மேல் அதிகாரி எஸ் பாலசந்திரன், யாழ் மேல் நீதவான் ஏ பிரேமசங்கர், யாழ் நகர சபையின் மேஜர் இமானுவேல் அர்னோல்ட், யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம், 51 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்கள் இணைந்து கொண்டனர்.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது பணிப்புரைக்கமைய 51, 512 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
அதனைப் போல் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஏற்பாட்டில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது பங்களிப்புடன் மாங்குளம் ஶ்ரீ சுகத விகாரையில் ஒக்டோபர் மாதம் 27 – 28 ஆம் திகதிகளில் ‘கடின’ பெரஹர நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வு 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது பூரண ஒத்துழைப்புடன் ஹிங்குரகன்டி ஶ்ரீ சுகத தேரர் அவர்களது தலைமையில் ‘கடின’ பெரஹர நிகழ்வு இடம்பெற்றது. latest Nike Sneakers | FASHION NEWS