12th October 2018 15:26:24 Hours
மதிப்பிற்குறிய முப்படைத் தளபதியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் தற்காலிக ஜெனரல் பதவிகள் பிரிகேடியர்களுக்கு கடந்த வியாழக் கிழமை (11) மாலை வழங்கப்பட்டது.
அந்த வகையில் இலங்கை சிங்கப் படையணி பிரிகேடியர் எச் குலதுங்க அனுராதபுரவில் (வட மத்திய) முன்அரங்கு பராமரிப்பு அதிகாரியாக காணப்படுவதுடன் இவர் தற்காலிக மேஜர் ஜெனரலாக கடந்த 3ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2018முதல் பெற்றார்.
இலங்கை இராணுவ சேவைப் படையணி பிரிகேடியர் எச் ஆர் ஆர் பி குணதிலக அவர்கள் வழங்கல் மற்றும் போக்குவர்தின் பணிப்பாளராக இலங்கை இராணுவ சேவைப் படையணியில் காணப்படுவதுடன் இவர் தற்காலிக மேஜர் ஜெனரலாக கடந்த 11ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2018முதல் பெற்றார்.
அந்த வகையில் இலங்கை சிங்கப் படையணி பிரிகேடியர் கே எம் டீ ஏ ஏ டி சில்வா அவர்கள் இராணுவ மகளிர் படையணியின் தளபதியாக காணப்படுவதுடன் இவர் தற்காலிக மேஜர் ஜெனரலாக கடந்த 12ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 2018 முதல் பெற்றார்.
இவ் அதிகாரிகள் தமது சேவைக் காலத்தின் போது மனிதாபிமான நடவடிக்கைகளில் காலாட் படைகளுக்கு மிகவும் உதவியாக இருந்ததுடன் தீவிரவாதத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிரான போராட்டத்தில் நாட்டிற்கான ஒரு சிறந்த சேவையை வழங்கினர். best shoes | M2k Tekno