03rd September 2018 21:38:41 Hours
இலங்கை இராணுவத்தின் பொறிமுறை காலாட் படையின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் தம்புள்ளையில் உள்ள பொறிமுறை காலாட்படைத் தலைமையகத்தில் தனது பதவியை திங்கட் கிழமை (3) ஆம் திகதி பதவியேற்றார்.
படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை பொறிமுறை காலாட் படையணியின் பிரதிக் கட்டளை அதிகாரியான கேர்ணல் ஜானக பிரியதர்ஷன அவர்கள் வரவேற்று பின்னர் படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் உள்ள இராணுவ ஞாபகார்த்த நினைவு தூபி வளாகத்திற்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களுக்கு நினைவஞ்சலியை செலுத்தினார்.
பின்னர் படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தி படையினருடன் பிரியாவிடை நிகழ்விலும் இணைந்து கொண்டார்.
பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் இராணுவ பேச்சாளராகவும், இராணுவ ஊடக பணிப்பாளராகவும் தற்பொழுது கடமை வகிக்கின்றார். latest jordan Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff